உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 25, 2012

கடலூரில் தானே புயலில் பாதித்த மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

கடலூர் : 
 
       கடலூர், ஆல்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர், திடீர்குப்பத்தில் தானே  புயலில் பாதித்த பள்ளி மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
 
            நடராஜன் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் குமார், பழனி, கருணாகரன், இளங்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களான மகாவீர்மல் மேத்தா, தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் பண்டரிநாதன், தமிழ் தேசிய விடுதலை பேரவை திருமார்பன், பரிதிவாணன் ஆகியோர் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கினர். அருள், புருஷோத்தமன், சிவா, சந்துரு, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். குப்புசாமி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior