உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 21, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலில் சேதமான ஆவணங்கள் புதுப்பித்துத் தர நடவடிக்கை

கடலூர்:

         "தானே" புயலில் காணாமல் போன மற்றும் சேதமடைந்த ஆவணங்களை பெற்றுத் தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் முன் வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ருத்ராபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

             கடந்த 30ம் தேதி வீசிய "தானே' புயல் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த கோரப் புயலில் வீடுகளில் வைத்திருந்த வீட்டுப் பத்திரங்கள், எல்.ஐ.சி., உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலைந்து போயுள்ளன.

               பலரது ஆவணங்கள் புயல் மற்றும் மழையில் நனைத்து சேதமடைந்தம், அழிந்தும் போயுள்ளன. இவர்களுக்கு மீண்டும் உரிய ஆவணங்களை பெற்றுத் தந்திடும் பொருட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் புயலில் ஆவணங்களை இழந்தவர்கள் பற்றிய தகவல் திரட்டி வருகிறது. எனவே, புயலில் ஆவணங்களை இழந்தோர் வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 10 முதல் பகல் 1 மணி வரையில் 04141-231183, 04142-284510 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். இந்த தகவலின் பேரில், சம்மந்தப்பட்டவருக்கு ஆவணங்களை பெற்றிட உரிய சட்ட உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior