உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

தானே புயலால் நெல்லிக்குப்பத்தில் வெறிச்சோடிய போகி சந்தை

நெல்லிக்குப்பம் : 

            காராமணிக்குப்பம் போகி சிறப்பு வாரச்சந்தை "தானே' புயலால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. 

               நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். ஆண்டுதோறும் போகிப் பண்டிகைக்கு முன்பு போகி சிறப்பு சந்தை நடக்கும். இச்சந்தையில் பொங்கலுக்குத் தேவையான பானை, மஞ்சள் கொத்து, மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்கத் தேவையான வர்ணங்கள், அலங்கார பொருட்கள், கயிறுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு "தானே' புயல் வீசியதால் மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான கிராமங்களில் பொங்கல் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இதன் காரணமாக நேற்று நடந்த போகி சந்தையில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior