இன்றைய செய்திகள்:

தினம் ஒரு திருக்குறள்

பிச்சாவரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

கிள்ளை : 
 
         பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
 
          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாவரம், பெரியகாரைமேடு, கணக்கரப்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பெரியகாரைமேடு, மீதிகுடி, சிதம்பர நாதன்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிச் செயலர் பாண்டியன் 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். மேலும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

0 கருத்துரைகள்:

Search

பிரபலமான இடுகைகள்