உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 13, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம்

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மாலை நேர வகுப்பு பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், 

           "சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நடந்த தீ விபத்தில் எழுது பொருட்கள் மட்டுமே எரிந்து சேதமானது. முக்கிய கோப்புகள் அலுவலகத்தில் இருந்தன. மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை' என்றார்.
பெற்றோர்கள் பேசுகையில், 

         "மாணவிகள் ஏதேனும் தவறு செய்தால் கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் பிள்ளைகளை கண்டிப்பதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்குவோம். கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் ஏற்படும் சில பிரச்னைகளால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கிறது' என்றனர். கூட்டத்தில் துறைத் தலைவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior