உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 14, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கடலூரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_405461.jpg

கடலூர் :

       ""இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட்டுக் கெடுக்கும் கும்பலை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, அழகிரி எம்.பி., பேசினார்.


கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக, கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியது: 

           கூடங்குளம் அணு மின் பிரச்னையில் முதல்வர் ஜெ., தவறான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார். முதல்வர் இதுபோன்ற பிரச்னையை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது. உலகில் பல நாடுகள் அணுவை பயன்படுத்தி வருவது தெரிந்தது. பிரான்ஸ் நாட்டில் அணு உலையைக் கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். எந்த ஒரு திட்டத்திலும், 100 சதவீதம் பாதுகாப்புடன் இருக்க முடியாது.


          என்.எல்.சி., நிறுவனம் கூட 100 சதவீதம் பாதுகாப்புடன் இயங்கவில்லை. நிலக்கரியை பயன்படுத்துவதன் மூலம் 50 கி.மீ., வரையுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் துகள்கள் காரணமாக, மாநிலத்திலேயே அதிக காசநோய் தாக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது. கூடங்குளத்தால் பாதிப்பு என போராடும் போது என்.எல்.சி.,யால் பாதிப்பு என, எங்களால் போராட முடியும். இப்படிச் செய்தால் மின் தடை மேலும் கூடுதலாகும். கூடங்குளம் மின் நிலையத்தை மூட வேண்டும் என்றால் என்.எல்.சி.,யும் இழுத்து மூட போராட்டம் நடத்துவோம்.


        தமிழகத்தில் திராவிட கட்சிகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள போர்டு, ஹுண்டாய் கம்பெனிகள் தமது விரிவாக்க கம்பெனிகளை குஜராத்தில் நிறுவுகின்றன. இதனால், 50 ஆயிரம் பேருக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பை நாம் இழந்து விட்டோம். குஜராத் மாநிலம் தொழில் துறையில் வளர்ச்சி பெற்றிருப்பதை மறுக்க முடியாது. தோஷிபா நிறுவனம் துவக்க விழாவில் முதல்வர், அன்னிய முதலீட்டை வரவேற்போம் என கூறியுள்ளார். ஆனால், லோக்சபாவில் நடந்த சட்ட முன்மொழிவில் எதிர்த்து குரல் கொடுத்த முதல்கட்சி அ.தி.மு.க., தான். இவர்களைப் போன்று அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்கிற கட்சியல்ல காங்கிரஸ்.

          முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு பெரிய விஞ்ஞானி. இவர் கூடங்குளத்தை ஆய்வு செய்து, பெரிய விபத்து ஏற்பட்டால் கூட அதைத் தவிர்க்க, நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கினார். அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத இந்த கும்பலுக்கு, மாநில அரசு ஆதரவு அளித்து வருகிறது. 1,000 பேர் கும்பலுக்காக கடந்த ஆறு மாதங்களாக திட்டம் துவக்கப்படாமல் உள்ளது. உங்களால் முடியாது என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். சி.ஆர்.பி.எப்., போலீசை வைத்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அன்னிய முதலீட்டாளர்கள் எப்படி இந்தியாவுக்கு வருவர்.


        கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு என போராடும் தேச விரோத கும்பலுக்கு, ஜெ., அரசு ஆதரவாக இருக்கக் கூடாது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில், வாய் மூடி மவுனமாக இருக்கக் கூடாது. இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட்டு கெடுக்கும் கும்பலை, 24 மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior