உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 02, 2012

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் :

         கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
 

           தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதில் டி.வி.எஸ்., அப்பலோ பார்மசி, செக்யூரிட்டி சர்வீஸ், ஓஷன் ஸ்பிரே ஓட்டல், ஸ்டார் ஹெல்த் நிறுவனங்களில் பணி புரிய ஆர்முள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம். 

               எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிகிரி படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior