உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 21, 2012

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior