உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 21, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior