உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 21, 2012

கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புனித வளனார் திருவிழா

கடலூர் புனித வளனார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் பங்கேற்ற அருள் தந்தையர்கள்.
கடலூர்:

        கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திங்கள்கிழமை புனித வளனார் திருவிழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாப்புலியூர் புனித வளனார் கல்வி நிறுவனங்களில் நடந்த இந்த விழாவில், கடலூர் புதுவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் அந்தோனி ஆனந்தராயர் கலந்து கொண்டார்.விழாவை முன்னிட்டு, தூய வளனார் கல்வி நிறுவனங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.இதையொட்டி மாலையில் தேர் பவனியும் நடந்தது. மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர்அடிகள், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள் மற்றும் அருள் தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior