உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 13, 2012

திட்டக்குடி கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பராமரிக்கப்படாத பள்ளி வகுப்பறை





திட்டக்குடி,:



        திட்டக்குடி அருகே உள்ள கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவர்கள் 217 மாணவிகள் உட்பட 418 பேர் படிக்கின்றனர். 17 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இயற்பியல் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களுக்கு நீண்ட காலமாக ஆசிரியர்களே இல்லை. இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளது. 

         இந்தப்பள்ளியின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது போதிய வகுப்பு அறைகள் இல்லை ஆனால் இருக்கின்ற வகுப்பு அறைகளும் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு முட்களும், காலி மது பாட்டில்கள்தான் கிடக்கின்றன. இந்த பள்ளியில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி ஒன்று உள்ளது ஆனால் மின் இணைப்புகள் அறுந்து துண்டு துண்டாக கிடப்பதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை 

         தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மழை நீர் எளிதாக பள்ளிக்குள் புகுந்து பள்ளியை குளமாக மாற்றிவிடுகிறது. மழைக்காலங்களில் மாணவிகள் நீந்திதான் பள்ளிக்குள் செல்லவேண்டும் மாணவிகள் அதிகம் படிக்கும் இந்தபள்ளியில் 24 மணி நேரமும் அன்னியர்கள் உள்ளே வருவதும் செல்வதும் என உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior