உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 10, 2012

பண்ருட்டி அருகே பஸ்-பைக் மோதல்: 2 பேர் சாவு

கடலூர்:

     மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

        கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்ஜித்குமார் (26) கிருஷ்ணராஜ் (25), சஞ்சய்காந்தி (34). இவர்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து பின்னர் கடலூர் திரும்பியுள்ளனர். திருகண்டேஸ்வரம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் ரஞ்ஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணராஜ் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior