உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 05, 2012

வன்னியர் இளைஞர் பெருவிழாவில் கடலூர் மாவட்ட பா.ம.க.வினர் பங்கேற்க முடிவு

கடலூர்: 

மாமல்லபுரத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடலூர் மாவட்ட பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை கூறாமல் வன்னியர் குல சத்திரியர் என பதிவது, கடலூர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க செயலர் அறிவுசெல்வன், மாறன் முன்னிலை வகித்தனர். தாஸ் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர்கள் ப.சண்முகம், திருஞானம் சிறப்புரையாற்றினர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior