உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கண்காணிப்பு கேமரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்காணிப்பு கேமரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 30, 2011

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கடலூர் :
 
            கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் 26 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்து ம் கூறியது:
 
 
         சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கடலூரில் முதல் முறையாக நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மீதுகட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் எஸ்.பி., அறையில் இவற்றை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரில் நடக்கும் மறியல்,போராட்டங்களை கண்காணிக்கலாம். மேலும் வன்முறை சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யும் வசதியுள் ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை கண்காணித்து, குற்றவாளியை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும்.
 
                தானே புயல் நாளை (இன்று) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன மீட்பு கருவிகளுடன், கடலூரில் 1000 போலீசார், விழுப்புரத்தில் 1500 போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1000 போலீசார் என மொத்தம் 4500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 64 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு தெரிவித்தார். எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., வனிதா உடனிருந்தனர்.

Read more »

வியாழன், நவம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வங்கிகள், அடகு கடைகள் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை வேண்டுகோள்

கடலூர் : 

           முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் "க்ளோஸ் சர்க்யூட் கேமரா' பொருத்தாத வங்கிகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

             தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், அடகு கடைகள் மற்றும் நகைக் கடைகளில் இரவு நேரங்களில் சுவற்றில் துளை போட்டு அங்குள்ள நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.பண்ருட்டியில் சண்முகம் என்பவரின் அடகு கடையில் கடந்த மே மாதம் 17ம் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம கும்பல் அங்கு படுத்திருந்த சண்முகத்தை கொலை செய்துவிட்டு 80 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது. இதேப்போன்று கடந்த 9ம் தேதி இரவு திட்டக்குடியில் பூபதி என்பவரின் நகைக் கடையில் புகுந்த மர்ம கும்பல் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றன. 

              மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களில் திருட்டுகள் அதிகரித்துள்ளது.இதனைத் தடுக்க போலீசார், மக்கள் அதிகம் கூடும், மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் "க்ளோஸ் சர்க்யூட்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதனை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை. பெயரளவிற்கு தங்களது வர்த்தக நிறுவனங்களில் இரவு நேர காவல் பணிக்கு முதியவர்களை நியமித்துள்ளனர்

             .இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.மேலும், குற்றங்களைக் குறைக்க போலீஸ் துறைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறியதோடு, தமிழகத்தில் குற்றங்களை குறைக்க வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்பதை நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் விதியாக்கப்படும் என அறிவித்துள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்டத்தில் பண பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வர்த்தக நிறுவனங்கள், விலை மதிப்பு மிக்க வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள், நகை கடைகள், அடகு கடைகள் பற்றிய விவரங்கள். அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளனவா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

            அதன்படி கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு, அரசு மற்றும் தனியார் வங்கிகள் 240 உள்ளன. அவற்றில் 81 வங்கிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மற்றும் பிரதான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளன. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலானவற்றில் இந்த வசதி ஏற்படுத்தவில்லை.அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 326 நகைக்கடைகளில் 63 கடைகளிலும், 823 அடகு கடைகளில் நான்கில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.கண்காணிப்பு கேமரா பொருத்தாத வங்கிகள், நகை மற்றும் அடகு கடைகளில் விரைவில் பொருத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Read more »

புதன், நவம்பர் 16, 2011

கடலூரில் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி தொடக்கம்

கடலூர் : 

           கடலூரில் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிக்கு முதல் கட்டமாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது.

           கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்டறியும் பொருட்டு நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு சேலத்தைச் சேர்ந்த எலிம் நிறுவனம் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பாரதி ரோடு ரவுண்டானா, பாரதி ரோடு நான்கு முனை சந்திப்பு, அண்ணா பாலம் சிக்னல், லாரன்ஸ் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு மற்றும் பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் நான்கு சுழலும் கேமரா, 18 கண்காணிப்பு கேமராவும், 28 ஒலி பெருக்கி கருவிகளை பொறுத்த உள்ளது.

           இதற்கான பூமி பூஜை கடந்த செப்டம்பர் 21ம் தேதி எஸ்.பி., பகலவன் தலைமையில் நடந்தது. அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் காரணமாக கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கவில்லை.தற்போது முதல் கட்டமாக சாலைகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைய உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்திட கேபிள் அமைக்க சாலை ஓரங்களில் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து கேபிள் இழுத்த பின் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து வரும் புத்தாண்டு முதல் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.



Read more »

வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்

கடலூர் : 

            கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

              மாவட்ட தலைநகரான கடலூரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் என எஸ்.பி., பகலவன் கூறினார்.அ தனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர்-சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

              அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள் குழுவினர் கேமிரா பொருத்தப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது டி.எஸ்.பி., வனிதா, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior