உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்

கடலூர் : 

            கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

              மாவட்ட தலைநகரான கடலூரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் என எஸ்.பி., பகலவன் கூறினார்.அ தனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர்-சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

              அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள் குழுவினர் கேமிரா பொருத்தப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது டி.எஸ்.பி., வனிதா, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior