உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நெய்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெய்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 26, 2012

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்

கடலூர் :

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து வருமான வரித்துறை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வருமானவரித்துறை சார்பில் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது.  நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் மாளிகையிலும், சிதம்பரம் அண்ணாமலை  நகர், விருந்தினர் மாளிகை சென்ட்ரல் ஹாலிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். கடலூர் மற்றும் விழுப்புரம் வருமான வரி அலுவலகங்கள் வரும் 28, 29ம்  தேதிகளில் விடுமுறை நாட்களிலும் செயல்படும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வருமான வரி படிவங்களை தாக்கல்  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read more »

சனி, ஜூன் 02, 2012

50 ஆண்டுகளை நிறைவு செய்த என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம்

நெய்வேலி:

ரஷிய தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன்கொண்ட என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் முதல் அலகு 50 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையிலும் தொடர்ந்து முழு மின்னுற்பத்தி அளவான 50 மெகாவாட் மின்சாரத்தை தடங்கலின்றி உற்பத்தி செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளது.

காமராஜரின் முயற்சியால், 1956-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று என்.எல்.சி. நிறுவனம் வர்த்தக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜரின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவந்த நேரு, 1957-ம் ஆண்டு மே 20-ம் தேதி நெய்வேலிக்கு வந்து, ஆண்டுக்கு 35 லட்சம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கத்தையும் மற்றும் மணிக்கு 6 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யும் அனல்மின் நிலையப் பணியையும் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து 1959-ம் ஆண்டு அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த டெக்னோபுரோம் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இந்த முதல் அலகின் கட்டுமானப் பணிகள் முடிந்து 1962 மே 23-ம் தேதி 50 மெகவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது. மின்னுற்பத்தி தொடங்கப்பட்ட முதல் அலகின் 50 மெகாவாட் மின்னுற்பத்தியானது 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அப்போதய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால், அன்றைய என்.எல்.சி. தலைவர் டி.எம்.எஸ்.மணி அவர்களின் முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அத்தகைய முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு இம்மாதம் 22-ம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனிடையே 9 அலகுகளின் கட்டுமானப் பணிகளிலும் நடைபெற்று, அனல்மின் நிலையத்தின் முழு மின்னுற்பத்தித் திறனான 600 மெகாவாட் 1970-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதல்அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 23.05.1962-ல் தொடங்கி 22.05.2012 வரை ஒரு கோடியே 43 லட்சத்து 2 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைவாய்ந்த முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகினை நினைவுகூறும் வகையில் முதல் அனல்மின் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கலந்துகொண்டு நினைவுக் கல்வெட்டை திறந்துவைத்தார்.

Read more »

புதன், மே 09, 2012

கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: கண்ணீருடன் கரும்பு விவசாயிகள்

நெய்வேலி அருகே அறுவடை தாமதத்தால் வயலிலேயே காய்ந்து வரும் கரும்பு.

நெய்வேலி:

 கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவேண்டிய கரும்புகள் வெட்டப்படாததால் அவை கருகுவதைக் கண்டு, பயிரிட்ட விவசாயிகள் கண்ணீருடன் மாற்றுவழித் தெரியாமல் தவிக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டுமே இயங்கிவருகிறது. இவற்றைத் தவிர பெண்ணாடம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நம்பி பயிர்செய்த விவசாயிகள் பயிரிட்ட கரும்பை குறித்த காலத்துக்குள் அறுவடை செய்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருமாத காலமாக போராடிவருகின்றனர். ஆனால் போராட்டம் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயப் பகுதியான சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோயில், கம்மாபுரம், சிதம்பரம், விழுப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது.

கூட்டுறவு ஆலைகளை நம்பி பயிரிட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருப்பதை அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கரும்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வட்டி அதிகரிப்பதால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்துவருவதால் கரும்பை வெட்ட முடியாத விரக்தியடைந்த தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் பயிர்வித்த கரும்பை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.கரும்பு விதைப் பயிர் சட்டத்திட்டத்திற்கேற்ப ஒரு இடத்தில் பயிரிட்ட கரும்பை குறிப்பிட்ட ஆலைகளைத் தவிர வேறு ஆலைகளுக்குக் கொண்டு சென்று அரைக்க முடியாத அவலநிலை இருப்பதால் கருகும் நிலையில் உள்ள கரும்புகளை வெட்ட முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதேநிலை நீடித்தால் கரும்பு விவசாயிகள் எதிர்காலத்தில் கரும்பு பயிரிடுவதை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும். இந்த நிலையை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும் அரசும் புரிந்துகொண்டு, மாற்று வழிகளை ஆராய்ந்து கரும்பு விதைப் பயிர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு இப்போராட்டம் நடைபெறுவதால், பாதிக்கப்படுவர்கள் கரும்பு விவசாயிகள்தான். தமிழக கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் கண் முன்னே தினந்தோறும் செத்து மடியும் கரும்பு விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறது? 






Read more »

திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்க தேர்தலில் அ.தி.மு.க.தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம்

நெய்வேலி :

   நெய்வேலி நகரில் தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றதையடுத்து அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

       என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டுப்பதிவில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் மற்றும் சின்னசாமி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து எம்.எல். ஏ.,க்கள் தலைமையில் நகர செயலர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராம உதயகுமார், அபு, தட்சணாமூர்த்தி, ஜெ., பேரவை நிர்வாகிகள் ஜெயக்குமார், மனோகரன், சொர்ணமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், பாலசுப்ரமணியன், ரகுராமன், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், அல்போன்ஸ், ஜோதி, ராஜா, கஞ்சமலை, தனவேல், ராஜகோபால், இளங்கோவன், சேகர், ஆறுமுகம், சுரேஷ்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.








Read more »

புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா


நெய்வேலி : 

        நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா நடந்தது.


      என்.எல்.சி., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழாவையொட்டி நடந்த கபடி, கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு அணிகளில் நீல அணி முதலிடத்தை வென்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. தடகளப் போட்டிகளில் மஞ்சள் நிற அணியினர் சுழற்கோப்பையை வென்றனர். தனித்திறன் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் தெய்வசிகாமணியும் பெண்களுக்கான பிரிவில் வித்யாவும் முதலிடத்தை பெற்றனர். 


       இதேப்போன்று கலை மற்றும் பண்பாட்டு தினவிழாவையொட்டி நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் கமலநயனன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் நல்லதம்பி,திருவள்ளுவர் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் அமுல்தாஸ், ஜவகர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார்.

     நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.  பேராசிரியர்கள் கிறிஸ்டோபர், சுஜாதா, உமாபதி, சேஷாத்ரி, இளங்கோவன், ஆளவந்தான், அனிதா, தமிழ்ச்செல்வன், வேல்முருகன், பானுமதி, பிரேமலதா மற்றும் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior