உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 11, 2011

உள்ளாட்சி தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள்

கடலூர் : 

           ""கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது'' என கலெக்டர் அமுதவல்லி கூறினார்.


கடலூரில்கலெக்டர் அமுதவல்லி கூறியது: 

                 மாவட்டத்தில் 2,772 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு 605 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 410 இடங்களில் 924 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் நுண்ணறி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் 25 ஆயிரத்து 356 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுகின்றனர். பணியமர்த்தப்பட்ட ஓட்டுப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களுக்கு தேர்தல் நடைபெறும் முதல் நாள் பகல் 12 மணிக்குச் செல்ல வேண்டும்.

                 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சள் கலரில் ஓட்டுச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை கலரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பும், ஊராட்சி வார்டு உறுப்பினர் வெள்ளை மற்றும் நீலமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இரு வார்டு கொண்ட ஓட்டுச் சாவடிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் வார்டிற்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டுகளும், இரண்டாம் வார்டிற்கு நீல நிற ஓட்டுச் சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி கூறினார்.

எஸ்.பி., பகலவன் கூறியது:

          தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் 4 அடுக்குப் பாதுகாப்பு, 127 நடமாடும் ரோந்து படையும், சட்டம் ஒழுங்கிற்கு 55 படையும் போடப்பட்டுள்ளது. மேலும் தேவையான போலீசாரை அரசிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு ஊடுருவும் மதுபான கடத்தலைத் தடுக்க 4 கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்படும். இன்று (நேற்று) கூட மதுகடத்தல் செய்த வாகனம் பிடிபட்டுள் ளது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Read more »

சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் நகராட்சிப் பகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கடலூர்:

          கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 126 வாக்குச் சாவடிகளில், 20 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன என்று கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 

இதுபற்றி நகராட்சி ஆணையர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது: 

              இந்தியாவில் முதல் முறையாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில், புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப் படுகிறது. 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். கடலூர் நகராட்சியின் 45 வார்டுகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை. 3 தாழ்த்தப்பட்டோருக்கு பொதுவான வார்டுகள். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

வாக்காளர் பட்டியல்:

              நகராட்சி அலுவலகத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தேவையான மாற்றங்கள் செய்வதற்கான படிவங்கள் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும். புதிய வாக்காளர்களை இப்போது சேர்க்க முடியாது. 

கடலூர் நகராட்சியில் 

ஆண்கள் 52,179. 
பெண்கள் 53,275. 
மொத்த வாக்காளர்கள் 1,05,456. 

                 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ஒரு பக்கத்துக்கு ரூ. 5 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 2.25 லட்சம் வரையிலும், உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 56,250 வரையிலும் செலவு செய்யலாம். பிரசார வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விதிமுறைகள் அனைத்தும் நகராட்சித் தேர்தலுக்கு பொருந்தும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: 

            காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. 

நகராட்சித் தலைவர் பதவிக்கு டெபாஸிட் தொகை ரூ. 2 ஆயிரம், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 1000. 
உறுப்பினர் பதவிக்கு ரூ. 1000. 
தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 500. 

               தலைவர் தேர்தலுக்கும் உறுப்பினர் தேர்தலுக்கும் தனித்தனி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. அவற்றை பெல் நிறுவனத்தினர் சோதனை செய்து வருகிறார்கள். கடலூர் நகராட்சித் தேர்தலுக்கு 5 உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஏற்கெனவே மதுக்கடை ஏலம் எடுத்து பாக்கி வைத்து இருப்பவர்கள் பட்டியலை நகராட்சிக்கு அரசு வழங்கி உள்ளது.

             கடலூர் நகராட்சியைப் பொருத்தவரை சுமார் 10 பேர் அப்பட்டியலில் உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் கலால் அலுவலகத்தில், தடையில்லாச் சான்று பெறவேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.   தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடலூர் நகராட்சிப் பகுதியில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படும் என்றார் ஆணையர்.











Read more »

புதன், ஏப்ரல் 06, 2011

உங்கள் வாக்கை யாரேனும் செலுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

          உங்களுடைய வாக்கை வேறு யாரேனும் செலுத்தினால், வாய்ப்பு பறிபோய் விட்டதே எனக் கருதி உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேறாதீர்கள். இதற்கான மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


            வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடி சென்றதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அப்போது, உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.நீங்கள் வாக்களிக்காத பட்சத்திலும் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை வாக்குச் சாவடி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இதையடுத்து, தேர்தல் சட்டத்தின் "49 பி' பிரிவின்படி வாக்குச் சீட்டு தரப்படும். 

             மேலும், இதற்கான பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் கையெழுத்து பெறப்படும். இதன்பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டைப் போன்றே ஒரு சீட்டு தரப்படும்.அந்தச் சீட்டின் பின்புறம், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள வாக்குச் சீட்டு (tendered ballot paper) என எழுதப்படும். அதில் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரியின் கையெழுத்திடப்படும். அந்தச் சீட்டு உங்களிடம் தரப்படும். அதனுடன் அம்புக்குறியிட்ட ஒரு ரப்பர் சீல் கொடுக்கப்படும். 

             சீட்டில் நீங்கள் விரும்பும் நபரின் பெயருக்கு எதிரே அந்த சீலின் உதவியுடன் அச்சிடலாம். இந்தச் சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும்.தண்டனை கிடைக்கும்...வாக்குச் சாவடிக்குள் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் இருப்பார்கள். வாக்களிக்கும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவர்கள் சோதிப்பார்கள். அதாவது, நீங்கள் வாக்களிக்கும் போது உங்களின் அடையாளம் கட்சி முகவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.அந்தச் சூழலில், உங்களது வாக்கு சவாலான வாக்காக (CHALLENGE VOTE) கருதப்படும். அடையாள சான்றாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் காட்டலாம். 

             சான்றுகளின் உண்மைத்தன்மை அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.அவர் வாக்காளர் இல்லை என்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் சவால் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாக்காளருக்கு வாக்குரிமை அளிக்கப்படும். சவால் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க முடியாது. அதேசமயம், அவர் கள்ள வாக்கு அளிக்க முயற்சித்தார் என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

Read more »

வியாழன், மார்ச் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச் சாவடிகளில் லேப்படாப்,வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சீத்தாராமன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் லேப்டாப், வெப் காமிரா மூலம் நேரிடையாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

                  கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு, பிறகு கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                  கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 1.7.2010 முதல் 25.1.2011 வரை 1,88,898 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 427 அடையாள அட்டைகளும் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-ல் இதுவரை 26,662-ம், பெயர் நீக்கம் செய்வதில் படிவம் 7-ல் 172-ம், பெயர் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ல் 3216-ம், தொகுதி விட்டு தொகுதி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் சோர்ப்பதற்கு படிவம் 8எ-ல் 1165-ம் பெறப்பட்டுள்ளது.

                இவை அனைத்தையும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு சம்மபந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டால் ரூ. 15 செலுத்தி மாற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  மேலும், பொதுமக்கள் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம், மருத்துவச்செலவிற்காக பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். 
              கடலூர் மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என 199 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றில் கல்லூரியில் கணினி பயின்ற மாணவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை லேப்டாப், வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1200 மேல் வாக்காளர்களைக் கொண்ட 47 வாக்குச் சாவடிகளும், 1400-க்கு மேல் 2 வாக்குச்சாவடிகளும், 1500-க்குமேல் 7 வாக்குச் சாவடிகளும் ஆக 50 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

               கிராமப்புறங்களில் அரசின் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பதற்கு 5 கிராமங்களுக்கு 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 1 உதவி பொறியாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பதற்கும் மகளிர் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

            அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக முதன் முறையாக வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவிற்கான விபரங்கள் அடங்கிய சீட்டினை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

வெள்ளி, மார்ச் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை'

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார். 

 கடலூர் மாவட்டத்தில்

திட்டக்குடி (தனி) தொகுதியில் 90, 
விருத்தாசலம் தொகுதியில் 139, 
நெய்வேலி தொகுதியில் 109, 
பண்ருட்டி தொகுதியில் 160, 
கடலூர் தொகுதியில் 73, 
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167, 
புவனகிரி தொகுதியில் 188, 
சிதம்பரம் தொகுதியில் 101, 
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144 
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன. 

                 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் விவரம், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பயன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம், வாக்குச் சாவடி அடங்கிய பகுதியின் வரைபடம், வாக்குச் சாவடியின் நிலை அறிய அவற்றின் அருகில் அரசியல் தொடர்பில்லாத நபர்களின் விவரம், வாக்குச் சாவடி காப்பாளர்கள் விவரம், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுலர்களின் முழு முகவரி அவர்களின் தொலைபேசி எண்கள் போன்றவை மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior