உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை'

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார். 

 கடலூர் மாவட்டத்தில்

திட்டக்குடி (தனி) தொகுதியில் 90, 
விருத்தாசலம் தொகுதியில் 139, 
நெய்வேலி தொகுதியில் 109, 
பண்ருட்டி தொகுதியில் 160, 
கடலூர் தொகுதியில் 73, 
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167, 
புவனகிரி தொகுதியில் 188, 
சிதம்பரம் தொகுதியில் 101, 
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144 
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன. 

                 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் விவரம், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பயன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம், வாக்குச் சாவடி அடங்கிய பகுதியின் வரைபடம், வாக்குச் சாவடியின் நிலை அறிய அவற்றின் அருகில் அரசியல் தொடர்பில்லாத நபர்களின் விவரம், வாக்குச் சாவடி காப்பாளர்கள் விவரம், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுலர்களின் முழு முகவரி அவர்களின் தொலைபேசி எண்கள் போன்றவை மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior