உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

சிற்ப தொழிலாளர்களுக்கு தனி வாரியம்: அரசுக்கு கோரிக்கை


சிதம்பரம் : 

                   தமிழக அரசு முத்திரையில் கோபுரத்தை மாற்ற சட்டசபையில் கோரிக்கை வைத்த எம். எல்.ஏ., ரவிக் குமாருக்கு திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட் டம் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சிதம்பரத்தில் நடந்தது.

                 பொதுச் செயலாளர் நடராஜன், மாநில தலைவர் சிவானந்தா, பொருளாளர் குணசேகரன், கொள்கை பரப்பு செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில அவைத் தலைவர்கள் சிவகடாச்சம், கோவிந்தராஜன், வக்கீல் சம்மந்தம், டாக்டர் ரங்காச்சாரி பங்கேற்றனர். தமிழக அரசு முத்திரையில் ராஜகோபுரத்தை மாற்ற வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ள எம்.எல்.ஏ., ரவிக்குமாருக்கு கண்டனம் தெரிவிப்பது. சிற்ப தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க அரசை வலியுறுத்துவது உட்பட பல தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior