உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை



ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டு வருகிறது.இதில் கண்டியங் குப்பம், தேத்தாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் சமத்துவபுரம் அமைக்க முன்மொழிவு செய்யப் பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் வருகை தந்தார். கண்டியங்குப்பம் மற்றும் தேத்தாம் பட்டு கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை பார்வையிட்டார்.
                   
                மாவட்டத்தில் இந்த அண்டு ஒரு சமத்துவபுரம் அமைக்கப்படும். இதில் பார்வையிட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள இருப்பு, தேத்தாம்பட்டு, கண்டியங்குப்பம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை சமத்துவபுரம் அமைக்க இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என கூறினார். இதில் சிதம்பரம் ஆர். டி.ஓ., ராமராஜி, தாசில்தார் வீரபாண்டியன், மண் டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ. சுந்தரம் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior