உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior