உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல் வழங்குவது குறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் 19 கோடி செங்கற்கள் தேவை. இவற்றைத் தங்கு தடையின்றி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் செங்கல் உற்பத்தியாளர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           அவ்வாறு உற்பத்தி செய்யும் செங்கற்களில் ஓயயப என்று முத்திரை பதிக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் மூலம் சிமெண்ட் கற்கள் தயாரிப்பதற்கு, காதி கிராம தொழில் வாரியத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 95 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, குழுக்களுக்கு தலா 4 லட்சம் வீதம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 

                வீடுகள் கட்டும் பணியில் கம்பி கட்டும் தொழிலை மேற்கொள்ள 80 சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா 4 லட்சம் வீதம் 3.20 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேவையான செங்கல் வழங்கப்படும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior