உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 25, 2010

பண்ருட்டியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

பண்ருட்டி:
                 
                    "மரபில் மலர்ந்த மகரந்தப் பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா பண்ருட்டியில் சனிக்கிழமை நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை நூலை வெளியிட, விழாவுக்கு தலைமை தாங்கிய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபா.இராஜேந்திரன் முதற்படியை பெற்றுக்கொண்டார்.

                    முன்னதாக கல்லைக்கவி தேவ.இராமதாசன் தலைமையில் "நான் பேசினால்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிக்காளமேகம் சக்தி, கவிஞர் வான்மதி கல்லைக்கண்ணன், ஆசுகவி ஆராவமுதன், தேனிசைக் கவிஞர் பரிக்கல் ந.சந்திரன், காரை பழ.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் வரவேற்றார். எழுத்தாளர் இமயம், நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் கல்லைக் கவிஞர் வீ.கோவிந்தராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior