உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

கடலூர் அருகே குறைந்த அளவு மண்ணெண்ணெய் சப்ளை: விற்பனையாளர் 2 பேர் திடீர் சஸ்பெண்டு

குறைந்த அளவு சப்ளை:
 
 மண்எண்ணை விற்பனையாளர்
 
 2 பேர்  திடீர் சஸ்பெண்டு; 
 
 அதிகாரி நடவடிக்கை


கடலூர்:

கடலூர் அருகே உள்ள பி.உடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் உளுத்தூர் மற்றும் வடதலைக்குளம் அங்காடிகளில் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோக அளவுக்கு குறைவாக விற்பனையாளர்கள் வழங்குவதாக புகார்கள் வந்தது.

                அதன்படி மேல் புவனகிரி கூட்டுறவு சார்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) விசாரணை நடத்தினார். அவர் அளித்த அறிக்கையின் படி மேற்கண்ட 2 அங்காடிகளின் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். எந்தஒரு அங்காடியிலாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோக அளவுக்கு குறைவாக மண்ணெண்ணெய் வழங்குவதாக தெரியவந்தால் தொடர்புடைய அங்காடி விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணைபதிவாளர் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior