உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

பயிர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

 கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பதற்காக கிராம அளவில், கிராம நிர்வாக அலுவலரும், உதவி வேளாண்மை அலுவலரும் கொண்ட குழு கணக்கெடுக்கும்பணி மேற்கொண்டுள்ளனர். 
 
             பிர்க்கா அளவில், வருவாய் ஆய்வாளரும், வேளாண்மை அலுவலரும், வட்ட அளவில் வட்டாட்சியர்களும், வேளாண்மை உதவி இயக்குநர்களும் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, மாவட்டம் முழுவதும் 438 கிராம நிர்வாக அலுவலர்களும், 75 உதவி வேளாண்மை அலுவலர்களும், 26 வேளாண் அலுவலர்களும் 32 வருவாய் ஆய்வாளர்களும், 7 வட்டாட்சியர்களும், 13 வேளாண் உதவி இயக்குனர்களும் கணக் கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
                மாவட்டம் முழுவதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகவும், சரியாகவும், விரைவாகவும் கணக்கு எடுக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior