உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 01, 2010

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு நவீன முறையில் கருத்தடை சிகிச்சை முகாம்

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான தழும்பில்லாமல் கருத்தடை செய்யும் முகாம் நடந்தது. 

                கடலூர் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன முறை கருத்தடை கிகிச்சை முகாம் மாவட்டம் முழுவதும் 8 வட்டாரங்களில் நடந்தது.  இதனைத் தொடர்ந்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் முகாம் அமைத்து ஆண்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

                      இதன் ஒரு பகுதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சையின்றி ஆண்கள் கருத்தடை செய்து கொள்ளும் முறை, உடன் வீட்டுக்குச் செல்லும் வகையில் நவீன முறையில் செய்வது குறித்து விளக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 28 பேர் இந்த முறையில் அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது என குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior