உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

          வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட திட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூகப் பணி, சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            வயது 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஊக்கத் தொகை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

நேரு யுவ கேந்திரா, 34, 
ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம்,
கடலூர் 

                  முகவரிக்கு வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-293822 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior