உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள்.

சிதம்பரம்:

            பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

           சிதம்பரம் பகுதியில் வல்லம்படுகை, வேளக்குடி, இளநாங்கூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர்.  இந்த ஆண்டு கரும்பு நல்ல விளைச்சல் பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள கரும்பு மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கிராக்கி அதிகம். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிதம்பரம் பகுதியில் கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100-க்கு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  

            இவையல்லாமல் வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி, லாரி வாடகை தனியாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரத்தில் கரும்பு உற்பத்தி இல்லாததால் தமிழகத்திலிருந்து குறிப்பாக சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு வேலூர் மற்றும் சென்னை கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ÷பொங்கல் பண்டிகைக்கு ஒரு கரும்பு ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது.  

           ஒ   ரு ஏக்கருக்கு 900 கட்டுகள் வரை கரும்பு கிடைக்கும். ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் வரை விலை கரும்புக்கு விலை கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இவையல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் தாங்களே கரும்புகளை நேரடியாக எடுத்துச் சென்று பொங்கலுக்கு ஒரு கரும்பு ரூ. 20 என விற்பனை செய்து அதிகம் லாபம் சம்பாதிக்கின்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior