உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

கடலூரில் கிராம மக்கள் திடீர் மறியல்; தனியார் கம்பெனி வேன் சிறை பிடிப்பு

4 மாணவிகள் பலி எதிரொலி:

 

 கிராம மக்கள் திடீர் மறியல்;

 

 வேன் சிறை பிடிப்பு

 

டலூர்:

         கடலூரை அடுத்துள்ள பெத்தாங்குப்பத்தில் தனியார் கம்பெனி வேனும், பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த வேனும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் திருச்சோ புரம், நந்தீஸ்வரன்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவிகள் அபிராமி, அகிலாண்டேஸ்வரி, பவித்ரா, திவ்யா ஆகியோர் பலியானார்கள்.

            விபத்துக்கு காரணமான தனியார் கம்பெனியின் வேன் நிர்வாகத்தினர் இதுவரை எவ்வித ஆறுதலும் கூறாததால் மாணவிகளை இழந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மாணவிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  மாண்டியாம்பள்ளம், தாழஞ்சாவடி ஆகிய பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருச்சோபுரத்தில் உள்ள தனியார் கம்பெனி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் கடலூர்- சிதம்பரம் ரோட்டில் மறியல் செய்தனர்.

             அப்போது அவ்வழியே வந்த தனியார் கம்பெனியின் வேனையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்தனர். சம்மந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior