உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் : 

            சுருக்கு முறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். 

          தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 1.1.2011ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப் படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல். நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25.10.2010 முதல் 13.11.2010 வரை 56 ஆயிரத்து 534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49 ஆயிரத்து 976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டது. 

அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டு கூறியது: 

             மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து தாலுகா, நகராட்சி, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior