உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 14, 2011

கடலூர் அரசு சேவை இல்லத்தில் பெண்கள் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            கடலூர் அரசு சேவை இல்லத்தில் தங்கி மேல்நிலைப் பள்ளியில் படிக்க பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 2011 - 12ம் கல்வியாண்டில் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது. இங்கு படிக்க விரும்புவோருக்கு இலவச உணவு, சீருடை, பாட புத்தகங்கள் நோட்டுகள் மற்றும் இருப்பிட வசதி செய்து தரப்படும். 14 வயது முடிந்தவராகவும், 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி தொழிற்பிரிவு - தையல் பயிற்சி (8ம் வகுப்பு தேர்ச்சி), தட்டச்சு அல்லது சுருக்கெழுத்து பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

முகவரி  
 
கண்காணிப்பாளர், 
அரசு சேவை இல்லம், 
கடலூர், 
நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, 
கடலூர் 

               என்ற முகவரியில் கிடைக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior