உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி துவக்கம்

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் "உலக வேதியியல் ஆண்டு 2011' தலைப்பில் கண்காட்சி துவங்கியது. 

            வேதியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் வரவேற்றார். பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் சிவ சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ஜெ. அனுசுயா துவக்க உரையாற்றினார்.

               இக்கண்காட்சியில் வேதியியல் சம்பந்தமான 50 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விழாவில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட உள்ளனர். இறுதி நாளான்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இணைப் பேராசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior