உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடலூர்:

 
            தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது 3 நாள் வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தமாக வியாழக்கிழமை அறிவித்தனர்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளுக்காக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

            அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் சங்கத்தினரை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்து தங்களது போராட்டத்தைக் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாற்றி இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர். இதனால் மக்களுக்கான ஊரக வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.  வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஊரக வளர்ச்சித் துறை) வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

              ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆதவன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் சணமுக சிகாமணி, உதயகுமார், வீரபாண்டியன், தமிழ்மணி, பழநிசாமிநாதன், குமார், கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior