உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கடலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து விற்பனை நிலையம்

கடலூர் : 

         கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 50 மருந்து கடைகளை புதியதாக திறக்கவேண்டுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் ஒரு பிரிவும், புதுப்பாளையத்தில் மற்றொரு மருந்து பிரிவும் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

               புதிய மருந்து பிரிவை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இணைப்பதிவாளர் வெங்கடேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு அதிகாரி மிருணாளினி உட்பட பண்டகசாலை ஊழியர்கள் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களின் நலன்கருதி இப்பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior