உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

திட்டக்குடி பகுதியில் மேம்பால கட்டுமான பணி: அதிகாரிகள் ஆய்வு

திட்டக்குடி : 

           திட்டக்குடி பகுதியில் நடந்து வரும் மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திட்டக்குடி வெள்ளாறு தரை பாலத்திலும், முருகன்குடி தரை பாலத்திலும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 

               கடந்த மழையின் போது கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். அதேபோல், ராமநத்தம்- பெண்ணாடம் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர். கோட்ட பொறியாளர் உத்ராபதி, உதவி கோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் ஆன்டி ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior