உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண்களையும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்டார். 

தேர்தல் அறிவிக்கப்பட்டதைக் தொடர்ந்து ஆட்சியர், புதன்கிழமை  அளித்த பேட்டி:

             9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் அவர்களின் செல்போன் எண்களும் வருமாறு: 

திட்டக்குடி தொகுதி (தனி): 

ஏ.கணபதி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், கடலூர் 98427-23080.

விருத்தாசலம் தொகுதி: 

கே.முருகேசன், விருத்தாசலம் கோட்டாட்சியர். 94450-00427. 

நெய்வேலி தொகுதி: 

ஆர்.கந்தசாமி, நெய்வேலி நில எடுப்பு தனித்துணை ஆட்சியர். 99941-92532. 

பண்ருட்டி தொகுதி:

டி.திருவேங்கடம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், கடலூர். 98948-21351. 

கடலூர் தொகுதி: 

வி.முருகேசன், கடலூர் கோட்டாட்சியர், 94450-00426.

குறிஞ்சிப்பாடி தொகுதி: 

ஏ.நடராஜன்: முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர், கடலூர். 94434-83094.

புவனகிரி தொகுதி: 

எஸ்.கல்யாணம், மாவட்ட வழங்கல் அலுவலர், கடலூர். 94450-00209.

சிதம்பரம் தொகுதி: 

எம்.இந்துமதி, சிதம்பரம் கோட்டாட்சியர், 94450-00425.

காட்டுமன்னார்கோயில் தொகுதி (தனி):

சிவி.கேசவன், கலால் உதவி ஆணையர்,  கடலூர். 98424-05631. 

              அனைத்து தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் இயங்கும். தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொள்ளலாம். 

அதன் தொலைபேசி எண்கள்:

04142- 220029. 04142- 230651-  219, 247, 213, 214. 

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசில் கட்சிகள்: 

இந்திய தேசிய காங்கிரஸ், 
பாரதிய ஜனதா கட்சி. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி,
தேசியவாத காங்கிரஸ் கட்சி, 
பகுஜன் சமாஜ் வாடி கட்சி, 
திராவிட முன்னேற்றக் கழகம், 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 
பாட்டாளி மக்கள் கட்சி.

                தற்போது கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் 1,200க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், அவற்றை ஆண், பெண் வாக்குச் சாவடிகளாகப் பிரிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.நகரங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் 1,400க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், அவற்றை ஆண், பெண் வாக்குச் சாவடிகளாகப் பிரிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

                 நேர்மையான தேர்தல் நடத்துவதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் நகரம், கிராமங்களுக்கென 2 குழுக்கள் வீதம், 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர் ஒருவர், காவல் துணை ஆய்வாளர் ஒருவர், மற்றும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார் ஆட்சியர். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior