உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 22, 2011

கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைக்கும் பணி தீவிரம்

கடலூர் முதுநகர் : 

             முதுநகர் ரயில் நிலையத்தில் கால அட்டவணை போர்டு, ரயில் பெட்டிகள் நிற்கும் இடம் குறித்த விவரங்கள் அடங்கிய போர்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

              கடலூர் நகரில் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது முதுநகர் ரயில் நிலையம். அகலப்பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், முதுநகர் ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டது. கடலூர் வழியாகச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் முதுநகர் ரயில் நிலையத்திலேயே நின்று செல்கின்றன. இதனால் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. விரைவு ரயில்கள் 2 நிமிடமே நின்று செல்வதால் முன் பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பெட்டிகள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

              இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், ரயில்கள் நிற்கும் பிளாட்பாரத்தின் எண், எந்தெந்த பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும், நேரம் குறித்த கால அட்டவணை அடங்கிய அறிவிப்பு பலகை அமைக்கும் பணி ஜரூராக நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior