உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் துப்பாக்கி வெடித்தது

             தமிழகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி சட்ட மன்ற தேர்தல் நடந்தது. திட்டக்குடி, விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 




           மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இருப்பதால், அங்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உட்பட பல்வேறு போலீசார் பணியில் இருந்தனர். நேற்று  இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகே துப்பாக்கி வைக்கும் அறைக்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சென்று தனது கை துப்பாக்கியை (9 செ.மீ பிக்ஸ்டல்) வைத்துள்ளார்.

                அப்போது, அவரது கைது தவறி துப்பாக்கி மீதுபட்டத்தில், துப்பாக்கி பயங்கர சத்ததுடன் வெடித்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சிடவசமாக உயிர்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior