உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

நாவரசு கொலை வழக்கில் ஜான்டேவிட் தனி அறையில் அடைப்பு

            மருத்துவக்கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலில் அவரது நடவடிக்கைகள் பற்றி அதிகாரி ஒருவர் கூறியது: 

             ஜான்டேவிட் ஒரு பிரபலமான கைதியாக கருதப்படுகிறார். இதனால் அவரை கடலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் சென்ட்ரல் பிளாக்கில் தனி அறையில் அடைத்துள்ளோம். இதுபோன்ற பிரபலமான கைதிகளை சில நாட்கள் தனிமை சிறையில்தான் அடைப்பது வழக்கம். ஏனென்றால் மற்ற கைதிகள் அவரோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை தீர்மானித்த பிறகுதான், மற்ற கைதிகளோடு அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில்தான் ஜான்டேவிட்டை தனி அறையில் அடைத்துள்ளோம்.

               அவர் ஜெயிலுக்கு வந்தவுடன் முகத்தில் எந்தவிதமான கவலையையோ, பயத்தையோ காட்டவில்லை. சர்வசாதாரணமாகவும், இயல்பாகவும் காணப்பட்டார். ஜெயிலில் வழங்கப்படும் சாப்பாட்டை நன்றாக சாப்பிடுகிறார். இரவிலும் நன்றாக தூங்குகிறார். மற்ற கைதிகள் அவரிடம் ஏதாவது பேசினால் சிரிப்பை மட்டுமே பதிலாக காட்டுகிறார். இரவில் தூங்குவதற்கு முன்பு பைபிள் படிக்கிறார். நாங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் அவர் மிகவும் இயல்பாக காணப்படுகிறார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior