உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 03, 2011

கடலூர் மாவட்டத்தில் 2,264 தபால் ஓட்டுகள்

கடலூர்:

         கடலூரில் தபால் ஓட்டுகள் போடும் பெட்டியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். 

         கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலங்களில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று அந்தந்த பகுதிகளில் தபால் ஓட்டுக்கள் போடும் பெட்டியை கலெக்டர் ஆய்வு செய்தார்

பின்னர் கலெக்டர் கூறியது:

             கடலூர் மாவட்டத்தில் போலீஸ், தேர்தல் அலுவலர்களுக்காக 6,046 ஓட்டுச்சீட்டுக்களும், சர்வீஸ் மென்களுக்காக 439 ஆக மொத்தம் 6,485 ஓட்டுச்சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை சர்வீஸ் மென்களிடம் இருந்து 24ம், போலீஸ் மற்றும் தேர்தல் பணியாளர்களிடம் இருந்து 2,240 என மொத்தம் 2,264 ஓட்டுச்சீட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் கால அவகாசம் இருப்பதால் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior