உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 03, 2011

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்:

               தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டை நீக்க நெய்வேலி நிலக்கரி நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

             அவ்வமைப்பின் நகர அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நிர்வாகிகள் பா.சுரேஷ், ரா.ராஜேஷ்குமார், சு.சுகன்ராஜ், ந.ஜான்பாண்டியன், வே.சுப்பிரமணியசிவா, செ.மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

                அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னை மாநகர பகுதிகளில் 1 மணி நேரமும், ஏனைய தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் 3 மணி நேர மின்வெட்டும் செய்யப்படுகிறது.  பல்வேறு கிராமம் பகுதிகளில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                       தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் மின்சாரம் நெய்வேலியில் இருந்து வழங்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. பாலாற்றை தடுக்கும் ஆந்திரத்துக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பெரும்பகுதி அண்டை மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. 

                அசாம் மாநிலம் சலகதியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அந்த மாநில அரசு கேட்டுப் பெற்றுள்ளது.எனவே தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என மனுவில் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior