உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்ப்பேன் : திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன்

திட்டக்குடி:
 
          திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் திட்டக்குடி வந்திருந்தார்.

திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன்  கூறியது:-

             திட்டக்குடி பகுதி கிராமங்கள் நிறைந்ததாகும் இந்த தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நல்ல குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி ஆகியவற்றில் முழுகவனம் செலுத்துவேன் அனைத்து கிராமங்களுக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படும், திட்டக்குடியில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும், வாரம் இரு முறைகள் என இந்த அலுவலகத்தில் நாள் முழுவதும் இருந்து பொது மக்களை சந்திப்பேன் அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன்.

                லட்சுமணபுரம் சாலை, தொழுதூர் சாலை, புடையூர் சாலை, சாத்தனத்தம் சாலைகள் உட்பட பல்வேறு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.   பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவருவேன் வெலிங்டன்ஏரி பாசனப்பகுதி விவசாயிகளின் நலனில் அக்கரைசெலுத்துவேன் வெலிங்டன் ஏரிஉட்பட அனைத்து ஏரிகளும் மராமத்து செய்யப்படும் அனைத்து வாய்க்கால்களும் சீரமைக்கப்படும் 3- 4 மாதங்களுக்கு ஒருமுறை என விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன், கீல்கல்ப்பூண்டி வெள்ளாற்றில் தரைப்பாலம், திட்டக்குடியில் போலீஸ் நிலைய கட்டிடம், தீயணைப்பு நிலையத்தில் குடியிருப்பு வசதி குறித்து நடவடிக்கை எடுப்பேன்.  இவ்வாறு தமிழ்அழகன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior