உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 14, 2011

பண்ருட்டியில் ரூ.32 லட்சம் மதிப்பில் மலட்டாறு பாலம் கட்டும் பணி துவங்கியது

பண்ருட்டி :

           பண்ருட்டி அடுத்த ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையிலான மலட்டாறு பாலம் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டும் பணி துவங்கியது. 

               பண்ருட்டி அடுத்த ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையில் உள்ள மலட்டாறு பாலத்தில் மண் மூட்டைகளால் ஆன தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மாற்று வழிப்பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மலட்டாறு ஜீவநதி எழுச்சிக்கூடல் விவசாயிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முயற்சியின் பேரில் ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையிலான பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

               8 மீட்டர் அகலத்தில் 20 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ள பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்களாக தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் காலதாமதமானது. இதனையடுத்து பாலத்தில் மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக ரெட்டிக்குப்பம் மலட்டாறு பகுதியில் பாலம் கட்டுவதற்கு "பொக்லைன்' இயந்திரம் மூலம் மணல் பகுதிகள் தூர்வாரும் பணிகள் நடந்தது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior