உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 14, 2011

பரங்கிப்பேட்டையில் ரஜினி உடல் நலம் பெற வேண்டி பாபாஜி கோவிலில் கூட்டு பிரார்த்தனை

சிதம்பரம்:

          சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி என்வழி.காம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் தமிழகத்தில் பல பகுதியிலிருந்து வந்து ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

                என்வழி.காம் என்ற அமைப்பின் ஆசிரியர் வினோ கூட்டு பிரார்த்தனையை தொடங்கி வைத்தார். இதல் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகள், அன்னதானம் நடைபெற்றது. பிரார்த்தனையில் கடலூர் பெரியசாமி, விழுப்புரம் இப்ராகிம், சுகந்திரவீரன், புதுக்கோட்டை குணசேகரன், திருவாரூர் தாயுமாணவன், திருச்சி அபினேஷ், சிதம்பரம் ரமேஷ்குமார், செந்தில்குமார், சபாபதி தீட்சதர், பாட்ஷா, சிவகுமார், ஜோதிநாதன், பரங்கிப்பேட்டை சிவபிரகாரம், சேத்தியாதோப்பு செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

             மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணையதளத்தை சேர்ந்த சங்கர், கலிபா, சந்தோஷ், கணேஷ், ரமேஷ்குமார், முத்துராமன், சரவணன், ஜான், ஆனந்த், ஸ்ரீதீபக், ஆஷிஷ் நடராஜ், ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior