உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 29, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 இணைப்பு சாலைகள்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/8de74606-f24e-4c8a-8126-6047c64585ca_S_secvpf.gif
 
கடலூர்:

             கடலூர் நகரின் மைய பகுதியாக உள்ளது லாரன்ஸ் ரோடு. இந்த சாலையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லாரன்ஸ் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது.

           ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரூ.22.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணி நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதையடுத்து ரெயில்வே சுரங்கப்பாதை பணியை தொடங்க டெண்டர் விடுமாறு கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டார்.

            இந்த நிலையில் இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிபுலியூர் கீழ்பாலம் பயனாளிகள் மற்றும் ஆலோசனைக்குழு கூட்டம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. 
 
கூட்டத்துக்கு சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணசேன் தலைமை தாங்கி பேசியது:-

              கடலூரில் ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி 13 மாதத்தில் முடிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. தற்போது 3 ஆண்டு காலத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. சுரங்கப்பாதை பணியில் பள்ளம் தோண்டும் போது அருகில் உள்ள கட்டிடங்கள் சுமார் 5 அடி முதல் 10 அடி வரை மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளது. மேலும் பாண்பரி மார்க்கெட் செல்ல பொதுமக்கள் திணறும் நிலை உள்ளது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்தில் 5 முக்கிய இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கடலூரில் போக்குவரத்தை சீரமைத்து விடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

            கூட்டத்தில் அழகப்பா ஜுவல்லரி (பெரியவர் கடை) உரிமையாளர் ராஜகோபால், வள்ளிவிலாஸ் பாலு, பவானி ஜெயபால் உள்பட பலர் பேசினார்கள். பயனாளிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior