உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிறைவு

 நெய்வேலி:

                      தமிழக அளவில் சிறப்பாக நடைபெறும் 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது. 

               14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நெய்வேலி வட்டம், 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்புத்தகக் கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் தொடங்கி வைத்தார்.  இக்கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகத்தைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் புத்தக விற்பனை செய்து வருகின்றனர்.  தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கின்றனர். இப்புத்தகக் கண்காட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதை புத்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் பாராட்டியுள்ளனர்.  

            இப்புத்தகக் கண்காட்சி குழுவின் புரவரலராக என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியும், தலைவராக சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன், செயலராக ஜார்ஜ்ஜேக்கப், ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது.  




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior