உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

கடலூர் பெரியகாட்டுப்பாளையத்தில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரம் அனுகிரஹா சேட்டிலைட் டவுன்ஷிப்

கடலூர் :

           கடலூர் - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் நவசக்தி கட்டுமான குழுமம் நிறுவனம் சார்பில் 120 ஏக்கர் பரப்பளவில் "அனுகிரஹா சாட்டிலைட் டவுன்ஷிப்' என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1,000 வீடுகள் கொண்ட நகரம் அமைக்கப்பட்டுள்ளது. 

           இந்நகரத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல் மிகப்பெரிய ஷாப்பிங் மால், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, யோகா மையம், நூலகம், ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., வசதி, சர்வதேச சிங்கப்பூர் டி.பி.எஸ். வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. நவசக்தி கட்டுமான குழுமத்தின் மற்றும் ஒரு நகரம் பிரான்ஸ் நாட்டு வடிவில் புதுச்சேரி மாநிலம், பிள்ளை யார்குப்பம் பகுதியில் "லா பிரான்ஸ் வில்லா' என்ற பெயரில் 50 ஏக்கர் பரப்பளவில் உயர்ந்த ரக குடியிருப்பு வீடுகள் கொண்ட நகரம் உருவாகப்பட்டு வருகிறது.இந்த நகரத்தில் 6 மாடல் கொண்ட வீடுகள் கட்டுப்பட்டு வருகிறது.

          "அடிலா' மாடல் குடியிருப்பு 3,600 சதுரஅடி கொண்ட இடத்தில் 3,500 சதுரடியில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இதேப்போன்று "அட்ரியா' மாடல் குடியிருப்பில் 3,600 சதுரடி நிலத்தில் 3,000 சதுரடியில் வீடும், "அட்ரா' மாடல் குடியிருப்பில் 2,400 சதுரடி நிலத்தில் 2,500 சதுரடியில் வீடும், "க்லாரா' மாடல் குடியிருப்பில் 2,500 சதுரடியில் 2,400 சதுரடியில் வீடும், "எலியோரா' மாடல் குடியிருப்பில் 2,400 சதுரடியில் 2,000 சதுரடியில் வீடும், "ரெனாடா' மாடல் குடியிருப்பில் 1,500 சதுரடியில் 1,500 சதுரடி வீடுகள் கட்டப்பட உள்ளது.

                  இந்த நகரில் அகலமான பிரதான சாலையும், குறுக்கு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமாக வாழ்வதற்கு ஏற்ப கழிவுநீர் வடிகால் வசதி, நல்ல குடிநீர், நாள் முழுவதும் மின்சார வசதி, பாதுகாப்பிற்கு செக்யூரிட்டி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சமாக கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பார்க், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ஷாப்பிங் மால், கிருபானந்த வாரியார் கும்பாபிஷேகம் செய்த கோவில் போன்ற சகல வசதிகளுடன் கூடிய மாசு இல்லாத காற்றோட்டமான வீடுகள் அமைத்து வருகிறது. இங்கு வீடு வாங்க வங்கி கடன் பெற உதவுகிறது. இந்நிறுவனத் தின் மேலாண் இயக்குனரான டாக்டர் மணிரத்தினம் இன்ஜினியர், ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல சமூக சேவைகளை ஏழை மக்களுக்காக செய்து வருகிறார்.


 For more details










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior