உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர்திருப்பாதிரிப்புலியூர் நாகம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா


கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் அருகே உள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு பூ வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது
கடலூர்:

           10 நாள்கள் நடைபெற்று வந்த, கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தை அடுத்துள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழா, சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

              சனிக்கிழமை நிறைவு விழாவாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் வீதி ஊர்வலம் நடந்தது. கடலூர் நகர மலர் வணிகர்கள் மற்றும் மலர் வணிகத்தில் உள்ள தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் இக்கோயில் அமைந்து இருப்பதால், விழாவையொட்டி லாரன்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு இருந்தது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior