உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/2c3776f4-1da9-4020-a016-6dda6c8a2293_S_secvpf.gif
 
கடலூர்:
 
                 கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு புதுவை மாநில அறிவியல் இயக்க செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். புனித வளனார் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகளார் முன்னிலை வகித்தார்.

               கண்காட்சியை கடலூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் மீனாட்சி சுந்தரம், அரசு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இக்கண்காட்சியில் 400 மாணவர்கள் பங்கேற்று 200 அறிவியல் படைப்புகளை வெளிபடுத்தினார்கள். கண்காட்சியின் மையக்கருத்தாக உயிரின பல்வகை அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்த்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் துறை ஆசிரியர்கள் மரியசேவியர், ஜான்பீட்டர், வாசு ஆகியோர் செய்து இருந்தனர்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior