உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து வசதிகள் நிறைவேற்றப்படும் : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்

கடலூர்:

            கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்  உறுதியளித்தார்.  

               மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் புதன்கிழமை ஆய்வு செய்ய வந்த கோட்ட மேலாளர் வைத்தியநாதன், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பொதுநல அமைப்புகளைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

பின்னர்  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன் கூறியது:

            திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வதிகளை செய்து கொடுக்குமாறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதி, பிளாட்பாரத்தில் ரயில் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்பதை அறிவிக்கும் வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நிறைவேற்றப்படும்.

                  திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், புவனேசுவரம் எக்ஸ்பிரஸ், வாராணசி எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. அந்த ரயில்கள் இங்கு நின்று போக வேண்டும் என்று கோரியுள்ளனர். இக் கோரிக்கைகளை ரயில்வே போர்டுதான் நிறைவேற்ற முடியும். இக் கோரிக்கைகளை ஏற்கெனவே நாங்கள் ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்து உள்ளோம். மீண்டும் இக் கோரிக்கைகளை பரிந்துரைப்போம். 

               சேலத்தில் இருந்து இயக்கப்படும்  நாகூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகூரில் இருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். அகலப்பாதைப் பணிகள் நடப்பதால் உடனடியாக சாத்தியம் இல்லை. இப்போதைக்கு கடலூர் வழியாக மயிலாடுதுறை வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரயிலை, திருப்பாப்புலியூர் வரை நீடிக்க முடியாது.

        திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் ஷெல்டர் வசதி செய்யப்படும். துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இட வசதிக்கு, டெண்டர் விடப்படும் என்றார் கோட்ட மேலாளர். 

               அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன், பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வெண்புறா குமார், திருமார்பன், மணிவண்ணன், அருள்செல்வன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். உடனடியாக கடலூர் சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான ரயில்கள் திருப்பாப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். சேலம் விருத்தாசலம் ரயிலை திருப்பாப்புலியூர் வரை நீடிக்க வேண்டும். முன்பதிவு நேரம் காலை 10 முதல் 12 மணி வரை என்று இருப்பதை, காலை 8  முதல் மாலை 6 மணி வரை என்று மாற்ற வேண்டும்.

              கடலூர் குப்பன்குளம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக, சிறிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலைய வளாகத்தை துப்புரவு செய்து அழகுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior